செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீச்சு

ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 2024 நாடாளுமன்ற மற்றும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பரப்புரையில் ஈடுபட்ட அந்த மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் திரு ஜெகன் மோகன் ரெட்டி மீது கற்கள் வீசப்பட்டன

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதன் X பக்கத்தில் காயமடைந்த திரு ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது

சமூக வலைத்தளங்களில் “விஜயவாடாவில் குண்டர்களின் உதவியுடன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு தான் நம் தலைவர் ஜெகன் மோகனைதாக்கியுள்ளனர் . இது நம் தோழர்கள் அனைவருக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் கோழைத்தனமான செயல். நம் தலைவரின் பேருந்து யாத்திரை வெற்றியையும், தலைவர் மீதான மக்களின் பெரும் அபிமானத்தையும் நம்பிக்கையையும் தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நமது தலைவரின் அறிவுறுத்துதலின்படி அமைதியாகவும், நிதானத்துடன் செயல்படுங்கள். இதற்கு வரும் மே 13ஆம் தேதி அன்று அனைத்து வாக்காளர்களும் பதிலளிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் இடது கண் புருவத்தின் மேல் ரெத்த காயம் அடைந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்ப பட்டு வருகிறது

இதன் காரணமாக தீவிர சண்டைகள் ஏற்படாத வண்ணம் இருக்கும்படி இரெண்டு கட்சியினருக்கும் அறிவுறுத்தல்கலை ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது

இருந்த போதிலும் பொதுவெளியில் நடந்த இந்த நிகழ்வு போலீசாரின் அஜாக்கிரதையை காட்டுகிறது என்று எதிர் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்

Related Articles

Back to top button