தமிழகத்தில் 2024 மீன்பிடி தடை காலம் ,மீன் சந்தைகளில் கூட்டம்
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 2024 தொடங்குவதால் இன்று காசி மேடு உள்ளிட்ட மீனவ சந்தைகள் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலங்களில் மீன் இனப்பெருக்கத்திற்க்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் கடைபிடிப்பது போல ,இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்கலாம் நாளை முதல் தொடங்குகிறது
இதன்காரணமாக சென்னை சுற்றுவட்டார மீனவ சந்தைகள் காசி மேடு சந்தை உட்பட கூட்டம் அலைமோதுகிறது
வருடா வருடம் மீன் இனப்பெருக்கத்திற்க்காக கடைபிடிக்க படும் 61 நாள் தடைக்கலாம் துவங்கத்தினாலும் ,கோடை விடுமுறை துவக்கத்தினாலும் ,இன்று ஞாயிறு என்பதாலும் தீவிர அசைவ பிரியர்கள் மீன் வாங்க மீன் சந்தைகளை நாடினர்
எனினும் குறிகிய தூரங்களில் கடலில் மீன் பிடிக்க தடையேதும் இல்லை என்ற போதிலும் ஆள் கடலுக்கு சென்று பிடித்து வரப்படும் மீன்களுக்கு இருக்கும் வரவேற்பு ,கரையோர மீன்களுக்கு கிடைப்பதில்லை என்பது குறிப்பிட தக்கது