செய்திகள்
“பிபர்ஜாய்’ புயல் காரணமாக கட்ச் கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு
பிபர்ஜாய் புயல் எதிரொலியால், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
பிபர்ஜாய் புயல் ஜூன் 15-ஆம் தேதி கரையை கடக்க கூடும் என்பதால், கட்ச் கடற்கரைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16-ஆம் தேதி வரை பள்ளிகளையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.