தபால் அலுவலகத்தில் புதிய சேமிப்பு திட்டம் – ரூ.5000 முதலீட்டில் லட்ச ரூபாய் வருமானம்?
தபால் அலுவலகத்தில் புதிய சேமிப்பு திட்டம் – ரூ.5000 முதலீட்டில் லட்ச ரூபாய் வருமானம்? :- இந்திய தபால் துறை வழங்கும் பிரான்சைஸ் திட்டம் சுமார் ரூ.5000 முதலீட்டில் லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்று தரக்கூடிய ஒரு சிறந்த சேவையை வழங்குகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
இந்திய தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களை விட தபால் துறை சேமிப்புகள் கூடுதல் வட்டி உள்ளிட்ட சில சலுகைகளை வழங்குகிறது. இந்த வரிசையில் தற்போது ரூ.5 லட்சம் முதலீட்டில் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் சிறந்த வாய்ப்பை தபால் துறை அளித்து வருகிறது. அதன் படி போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான பிரான்சைஸ் திட்டத்தை வழங்குகிறது.
அந்த வகையில் தபால் நிலைய பிரான்சைஸ் மற்றும் தபால் நிலைய முகவர்கள் பிரான்சைஸ் என்ற 2 சேவைகளில் வாடிக்கையாளர்கள் ஏதாவதொரு சேவையை தேர்வு செய்யலாம். இதில் தபால் நிலைய முகவர்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்கள் தோறும் போஸ்டல் ஸ்டாம்புகள், எழுதுப்பொருட்களை வழங்குபவர்கள் ஆவார். இப்போது இந்த போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸை தொடங்க தகுதியுடையவர்கள் யார் என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸை தொடங்கும் நபர் முதலில் 8 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். தவிர பள்ளியில் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதற்கான ஆதாரத்தை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால் பிரான்சைஸ் தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் ஒருவர் பெற்றுக்கொள்ளும் சம்பாத்திய விவரங்களை பொருத்தளவு,
- ரெஜிஸ்டர் போஸ்ட் – ரூ.3
- ஸ்பீட் போஸ்ட் – ரூ.5
- ரூ.100 முதல் ரூ. 200 வரையுள்ள மணி ஆர்டர் – ரூ.3.50
- ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டர் – ரூ. 5
- 1000க்கும் மேற்பட்ட புக்கிங் மற்றும் ஸ்பீட் போஸ்டு – மாதம் 20% கூடுதல் கமிஷன்.
- தபால்தலை, அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் விற்பனைத் தொகையில் 5% தொகை கமிஷன்
- வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகளின் விற்பனை உள்ளிட்ட சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40% தொகை கமிஷனாக கிடைக்கும்.
விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள்:
- முதலில் பிரான்சைஸ் அவுட்லெட்டின் செயல்பாடுகளை விளக்கும் வணிகத் திட்டத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த படிவம் தபால் நிலையத்திலிருந்து நேரடியாக கிடைக்கும்.
- அல்லது இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இப்படிவத்தை நிரப்பி சமர்ப்பித்தவுடன், தபால் துறையின் ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்திட வேண்டும்.
- விண்ணப்ப பதிவு முடிந்த 14 நாட்கள் கழித்து உங்கள் பிரான்சைஸை தபால் கோட்ட தலைவர் உறுதி செய்வார்.