Articles

அரையாண்டு விடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை கிடைக்குமா

அரையாண்டு தேர்வு இல்லை என்ற அறிவிப்பு வந்த போதிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இந்த வருடம் கிடையாது என்ற செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் தொடர்ந்து பள்ளிகள் இயங்கி வருவதால் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தொய்வு ஏற்படாத வண்ணம் பண்டிகை கால விடுமுறையேனும் கிடைக்குமா என்ற ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தமிழக அரசு மற்றும் கல்வி மந்திரியிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் ,நேற்றய தினம் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் Dr. அ.மாயவன் Ex.MLC அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வேண்டுதல் கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்தனர்

அதில் ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு முடிவின் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புத்தாண்டு பிறப்பும் சேர்ந்து வருகின்றன ,எப்போதும் விடுமுறை என்பதால் இந்த பண்டிகைகளுக்கு தனியாக விடுமுறை கேட்டு விண்ணப்பித்து கிடையாது

ஆனால் இந்த வருடம் அரையாண்டு தேர்வு கிடையாது என்ற காரணத்தினால் அரசு இந்த பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேட்டு கொள்வதாக அதில் தெரிவித்திருந்தனர்

Related Articles

Back to top button